EPPADI MUDINTHATHU ?
மழை துளியே,
நீ விழும் போது யாரேனும் உனக்கு அறிவுரை கூறினார்களா ....
பின்பு எப்படி உன்னால் மட்டும் முடிந்தது முத்தாய் மார........
நதியே,
நீ செல்லும் போது யார் உனக்கு வழி காட்டியது
கடலை சென்றடைய........
விதையே ,
நீ முளைக்கும் போது யார் தேற்றியது
உன்னாலும் வளர முடியும் என்று........
மலரே ,
நீ மலரும் போது யார் உன்னிடம் கூறியது
எங்களின் மனதை பறிக்க முடியும் என்று ....
பறித்துவிட்டாயே.....
"ஊன்றுகோளையும் தூண்டுகோளையும்
வெளியில் தேடாதே! "
.....உங்கள் கருத்து
Comments
Post a Comment